Guest
|
கங்குலி போன்று போராடுவேன்:திலிப் திர்கே : முன்னாள் ஹாக்கி கேப்டன்
செப்டம்பர் 18,2008,16:57 IST
புதுடில்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியை போன்று தளராமல் போராடுவேன் என்று முன்னாள் ஹாக்கி கேப்டன் திலிப் திர்கே தெரிவித்துள்ளார்.இந்திய ஹாக்கி தேர்வுக் குழு, நேற்று முன்தினம் 2010 காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டி, மற்றும் உலகக் கோப்பை ஹாக்கி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கான, 48 பேர் கொண்ட உத்தேச அணியை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அறிவித்துள்ளது. இந்த அணியில் அனுபவ வீரர் திலிப் திர்கே இடம்பெறவில்லை. இது குறித்து திலிப் திர்கே மும்பையில் அளித்த பேட்டி: சவுரவ் கங்குலி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவருடைய போராடும் குணத்தை பாராட்டுகிறேன். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. இவரை போன்று ஏற்ற இறக்கத்தை, என்னுடைய வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். இந்தியாவில் முதன் முதலாக நடக்க இருக்கும் பிரபலமான ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்த ஆர்வமாக இருந்தேன். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், உத்தேச அணியில் இடம்பெறுவேன் எ
18 September, 2008 06:12 PM
|
|